தெருமுனை பிரச்சாரம் 15.09.2024

மல்லிப்பட்டினம் ECR சாலை இருபுறமும் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற TNTJ கோரிக்கை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளை சார்பில் இன்று 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் பள்ளிவாசல் தெருவில் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் முஹம்மது யூசுப் Miscஅவர்கள் இணைவைப்பை வேரறுக்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் மாவட்டப் பேச்சாளர் பாரீஸ்கான் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் மல்லிப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட ECR சாலை இருபுறமும் மண்டி கிடக்கும் கருவேல மரங்களால் வாகண விபத்துக்கள் அதிகரித்து உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன.எனவே ECR சாலை இருபுறமும் உள்ள கருவேல மரங்களை விரைந்து அகற்றும்படி ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும்,
வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது, வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து 
இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த 
கண்டித்தும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளா கூட்டு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின்
சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் கூட்டுப் பாராளுமன்றக் குழுவிற்கு வக்ப் சட்டம்
குறித்த எதிர்ப்பை கடிதங்களின் மூலமும் ஈமெயில் மூலமாகவும் பதிவு செய்ய வேண்டும் எனவும் 

தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு 
உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மேலும் சாதிவாரிக்கணக்கெடுப்பை 
எடுத்து இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசிற்கு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் அப்துல்லாஹ்,மஜீத்,கமால் மற்றும் ஹஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆண்கள், பெண்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக கிளை துணைச் செயலாளர் ஹஜ் கபீர் அவர்கள் நன்றி கூறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்